Connect with us

Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News

கொரோனா சிகிச்சையளிக்க ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

State

கொரோனா சிகிச்சையளிக்க ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

கொரோனா சிகிச்சையளிக்க ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

கொரோனா சிகிச்சையளிக்க
2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.அதிலும் கடந்த வாரம் மட்டும் தினசரி 6000 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு வந்தது.இதனால் தற்போது மரணங்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.கடந்த இரண்டு நாட்களாக தினசரி தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 க்கும் அதிகமாக இருக்கிறது.ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதில் 55152 பேர் சிகிச்சை பெற்றும்,2 லட்சத்து எட்டாயிரம் பேர் குணமடைந்தும் வீடு திரும்பியுள்ளனர் என்று ஆய்வு அறிக்கை கூறுகின்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இதுவரை சுமார் 4349 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

55152இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீட்டு தனிமையில் (ஹவுஸ் கோரன்டைன்)
இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் “கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம்”எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.இந்தக் குழுவில் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் யோகா மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், உள்ளிட்ட குழுக்களாக செயல்படுவர்.மேலும் இந்த 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு முழு மருத்துவ உதவிகளையும் வீடு சென்று வழங்குவார்கள்.

மேலும் அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு மருத்துவப் பெட்டகம் வழங்கப்படும் அதில் விட்டமின் மாத்திரைகள், முகக் கவசங்கள்,ஆக்சி மீட்டர் கருவிகள்,தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை அந்தப் பெட்டிக்குள் இருக்கும்.மருந்துச் சீட்டுகள் ஆன்லைன் மூலமும் மருத்துவ ஆலோசனைகள் காணொலி காட்சி மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.இத்துடன் கூடவே யோகா பயிற்சியும் வழங்கப்படும் இத்திட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பர்.அப்பொழுது அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து தரப்படும்.

இவ்வளவு வசதிகள் உள்ளடக்கிய இந்த திட்டத்தில் சேர்வோர்களுக்கு கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் ஒரு கண்டிஷன் என்னவென்றால் ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு விட்டு தனிமையில் இருக்க தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு 14 நாட்கள் சிகிச்சை தொகுப்பிற்காக ரூ 2500 வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகின்றது.இந்தத் திட்டத்தில் சேர முன் வருபவர்களுக்கு மட்டுமே 2500 ரூபாய் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in State

To Top